Thursday, February 11, 2010

திரைகடல் ஓடி

பாரதியார் சொல்லவில்லை எனக்கு
நன்பண் சொன்னான்
டாலரின் மதிப்பு ஐம்பது ரூபாய் என்று.
வெளிநாடும் வேண்டாம்
டாலரும் வேண்டாம்
என்னுடன் இரு போதும்
அழுது கொண்டே சொன்னாள்.

இன்றோடாகிறது ஒரு வருடம்.
விமான நிலையத்தில் கடைசியாக
வாங்கிய முத்தம் கன்னத்தை
தடவுகையில் மனதை ஈரமாக்கியது.
இதோ வந்துவிட்டேன்
நூறடி தூரம்தான்
ஐந்து நிமிட சோதனை
ஒரு வருட தவிப்பை இரட்டிப்பாக்கியது.

ஓடி வந்து கட்டிக் கொண்டாள்.
நூறு பேர் சுற்றியிருப்பதை
சட்டை செய்யாமல்.
பிரிந்த பொழுதைவிட இப்போது
அதிகம் அழுகிறாள்.

இம்முறை நான் ஆறுதலேதும்
சொல்லத்தேவையில்லை.


காதலுடன் நவநீ

1 comment:

sarathy said...

எனக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு... சென்னை லேண்டிங்...

ஆனால் ஒரு வருடம் இல்ல இரண்டு வருடம் கழித்து..

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP