Saturday, June 6, 2009

சிறை வாசம்

நான் எதிர்பார்க்கவே இல்லை இப்படி நடக்கும் என்று. ஜெயில் என்பதை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த நான் ஜெயிலுக்கு போவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. "எல்லோர் வாழ்விலும் இப்படித்தான் சில விஷயங்கள் நடந்து விடுகின்றது. சினிமாவிலும் மற்றவர் வாழ்விலும் பார்கின்ற சில‌ விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் போது சில சமயம் பிரமிப்பும், அதிக எதிர்பார்ப்பின் காரணமாக ஏமாற்றமும் ஏற்படுவது இயல்பே." அந்த வகையில் இந்த ஜெயில் அனுபவம் எனக்கு
பிரமிப்பை ஏற்படுத்தியது.

நேற்றைக்கே சற்று சந்தேகம், நாளைக்கு ஜெயிலுக்கு போக வேண்டிவரலாம் என்று. நினைத்தபடியேதான் நடந்தது. சரியாக பதிணோறு மணிக்கு சென்னை சென்ட்ரல் ஜெயிலில் ஆஜரானேன். சென்னை மத்திய சிறைச்சாலை என்பதை படிக்கும்போது திக்கென்று இருந்தது.
ஒரு பயம் மனதுக்குள், அனிச்சை செயலாய் கை, கால் உதரெலுடுக்காததுதான் பாக்கி.
எங்கும் கூட்டம், தெரிந்த முகங்கள் தென்படுகிறதா என தேடுகிறது மனம், ஏதோ உறவினர் திருமணத்தில் சொந்தகாரர்களை தேடுவது போல்.

பெரிய இரும்பு கேட்டில் இருந்த சின்ன கதவை திறந்து உள்ளே அனுப்பினார்கள்.
சிதிலடைந்த சுவர், துருப்பிடித்த இரும்பு கம்பி ஜன்னல்கள், கிரீச் என சத்தம்
போடும் கதவுகள் என ஒரு பாழடைந்த பங்களாவிற்குரிய எல்ல தகுதிகளோடும் இருந்தது ஜெயில்.

திகிலுடன் பயந்துபோய் நின்று கொன்டிருக்கும்போது ஒரு குரல் கேட்டது எனக்கு மிக அருகில் ஒரு குரல்....
"சுண்டல், பட்டாணி, வேரிக்கடலை. வாங்கிக்கிங்க சார், அஞ்சு ரூபா தான் சார்."

என்ன ஜெயிலுக்குள்ள வேர்க்கடலை எல்லாம் விக்கறாங்க என்ற யோசித்த போதுதான் நேற்று நண்பன் சொன்னது நினைவிற்கு வந்தது.

" டேய்! சென்ட்ரல் ஜெயில இடிக்க போறாங்களாம். அதனால ஒரு வாரத்துக்கு மக்கள்
சுத்தி பார்ப்பதற்காக‌ விட்டுறுக்காங்க, வா போய் ஒரு ரவுண்டு சுத்திட்டு
வரலாம்."

அ ன் பு ட ன் நவநீதன்.

No comments:

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP