Saturday, June 6, 2009

ட்ராஃபிக்.

என்ன வண்டி ஓட்டறானுங்க இவனுங்க? டுபாக்கூரு வண்டி வெச்சுகிட்டு நம்மகிட்டயே பந்தா காட்டுறானுங்களா?. நான் ஸ்கூல் படிக்கும்போதே RX 100 ஓட்டினவன். மனதிற்குள் ஒரு மேடை போட்டு அவனை அவனே வாழ்த்திக் கொண்டிருந்தான்.

மச்சான்,பொல்லாதவன் தனுஷைவிட சூப்பரா ஓட்றடா என்று சொன்னால் நம்பிவிடுவான். கல்லூரியில் நண்பர்களும் இதை டீ, பப்ஸின் மறுவடிவமாகவே நினைத்ததால், பசிக்கும் போதெல்லாம் தனுஷை திட்டினர். டிகிரி வாங்காவிடினும் கோர்ஸ் முடிந்திருந்தது. வேலை தேடிக் கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரி, நண்பனுடன் திருவல்லிக்கேனியில் அடைக்கலம் என்ற சராசரி முகவரி கிடைத்தது.

”அம்மா, சென்னை ஜாப் சர்ச் பண்ண போறேன். எனக்கு பைக்கு வேனும்.”
ஏண்டி? அரியர் கிளியர் பண்ண துப்பில்ல, இதுல வேல தேட போறாரு.அதுல பைக் ஒரு கேடு. இருக்கற பைக்குக்கே பெட்ரோல் போட வக்கில்ல, இதுல பல்சரு வேனுமா பல்சரு. போ, கலெக்டர் வேலை காலியா இருக்காம், போய் சேர்ந்துக்க.”
என்னதான் அவன் அப்பா கொதித்தெளிந்தாலும் அம்மாவிடம் அடம்பிடித்து பைக்கை வாங்கிவிட்டான். பையன் சென்னைக்கு புதுசு. பஜாஜ் பல்சர் 180 சிசி பளபளத்தது. கொஞ்சம் அதிகமாகவே விளம்பரபடுத்திக் கொண்டான்.

முதல் நாள் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போனான்.
”வாவ்..பொமனேரியன்” என ஜொள்ளினான். நயாகரா நீர் வீழ்ச்சிக்கு ஒரு போட்டி உருவானது.
ஸ்லீவ்லெஸ், முட்டிக்கு சற்று மேல் வரை ஷார்ட்ஸ், ஐபாடில் நிச்சியம் ரிக்கி மார்டினாகத்தான் இருக்க வேண்டும், அவள் உட்கார்திருக்கிறாளா இல்லையா என்ற குழ்ப்பத்திலேயே ஸ்கூட்டி பெப் மெதுவாக போய் கொண்டிருந்தது.

கொஞ்சம் சேட்டையை ஆரம்பித்தான், வேகமாய் போய் ப்ரேக் அடித்தான். வீலிங் பண்ணினான். இடிப்பது போல் போய் கட் அடித்தான். அவள் அசரவே இல்லை. ஆனால் அவனோ, இது போதும் பொண்னு ரொம்ப மெரன்டுரும் என சாதித்த திருப்தியுடன் பைக்கை விரட்டினான். பஸ்ஸிற்கு முன்னால், வேனிற்கு முன்னால் என பறந்தான். காரை தான்டினான், டூவீலரை சைடு எடுத்தான், டாடா சுமோவிற்கு டாட்டா காட்டி போனான். பின்னால் திருப்பி பார்த்தான் அவள் எந்த சலனமும் இல்லாமல் முன்பு போலவே வந்து கொண்டிருந்தாள். இவ இப்படியே ஊர்ந்துகிட்டு போனா நாளைக்குதான் வீட்டுக்கு போவான்னு நெனைக்கிறேன். அவளுக்காக பரிதாபப்பட்டபோது ரெட் சிக்னல் விழுந்திருந்தது.

எல்லாரும் வண்டியை ஆப் பண்ணியிருக்க, பத்து செக்ண்டுல என்னத்த பெட்ரோல் மிச்சமாயிரும்னு இவனுங்க வண்டிய ஆப் பன்றானுங்க என நினைத்தான்.

சிக்னல் லைட்டையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்னடா இது? ஒரு நிமிஷம் ஆச்சு இன்னும் கீரின் போட மாட்டேங்குறான்.
ஒரு வேளை கரண்டு போயிடுச்சா?

2....3....4...5 என் நிமிடங்கள் கரைந்தது.

அடச்சே.. என்ன கொடுமைடா இது. அஞ்சு நிமிஷம் ஆச்சு இன்னும் போடமாட்டேங்குறான்.கடுப்பில் நின்று கொண்டிருந்தான்.


எத்தேச்சையாக திரும்பினான், அப்போதுதான் கவனித்தான் அவனுக்கு பின்னால் அவள் நின்று கொண்டிருந்தாள் எந்த சலனமும் இல்லாமல். இவ எப்ப வந்தா? என அவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தபோது கிரீன் சிக்னல் விழுந்திருந்தது.


அன்புடன் நவநீதன்

1 comment:

anil said...

no comments

Post a Comment

468x60 Ads

728x15 Ads

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP